business

img

இலங்கைக்கு மருத்துவ ஆக்சிஜன் அனுப்பிய இந்தியா ....

புதுதில்லி:
இலங்கைக்கு சுமார் 150 டன் மருத்துவ ஆக்சிஜனை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.இலங்கையில் கொரோனா தொற்றின்  3-வது அலையால் பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள னர். மக்களை பாதுகாக்க இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளின் உதவியைஇலங்கை நாடியுள்ளது. இதை ஏற்றுஇலங்கைக்கு இந்திய ஒன்றிய அரசு உதவி வருகிறது. கடந்த 22-ந் தேதி 100 டன் மருத்துவ ஆக்சிஜனை கடற்படை கப்பல் மூலம் அனுப்பிவைத்தது.மேலும் சுமார் 150 டன் ஆக்சிஜனை தற்போது  அனுப்பியுள்ளது. விசாகப்பட்டினம், சென்னை துறைமுகங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்ட இந்த ஆக்சிஜன், இலங்கை யை அடைந்துவிட்டதாக கொழும்பு வில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

;